பிரியங்கா பெர்னாண்டோ கைது செய்யப்படவேண்டும்

சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென லண்டனில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினமான நேற்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து தூதரகத்தின் முன் கோசங்களை எழுப்பினர். இந்நிலையில் குறித்த எதிர்ப்பு … Continue reading பிரியங்கா பெர்னாண்டோ கைது செய்யப்படவேண்டும்